அரசின் நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை கூடுதல் இயக்குநருடன் சந்திப்பு.

தமிழ்நாடு அரசின் நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை கூடுதல் இயக்குநர் திருமிகு.சரவணன் அவர்களை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவர் திருமிகு.த.அமிர்தகுமார் அவர்கள் நேரில் சந்தித்தார்கள்.
துறையின் கூடுதல் இயக்குநர் அவர்களை சந்தித்தப்பொழுது தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் 2026 -ஆம் ஆண்டிற்கான நாட்குறிப்பு வழங்கப்பட்டது.
இச்சந்திப்பின் பொழுது தமிழ்நாடு நில அளவு கணிக வரைவாளர் ஒன்றிப்பின் மாநிலத்தலைவர் திரு.க.பிரபு,பொதுச்செயலாளர் திரு.அ.வெங்கடேசன்,முன்னாள் தலைவர் திரு.மணிமாறன்,மாநில இளைஞரணிச் செயலாளர் திரு.அ.பழனிச்சாமி,மண்டல இளைஞரணிச் செயலாளர் திரு.எம்.எஸ். இராஜேந்திரன் உள்ளிட்ட நிருவாகிகள் கலந்துகொண்டனர்.

இங்ஙனம்,
மாநில மையம்
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், சிவ.இளங்கோ இல்லம்,
7,நீலி வீராசாமி தெரு,
திருவல்லிக்கேணி,
சென்னை -600 005.